மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் நேற்று (24) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கால் முறிந்த நிலையில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டி, சிறைச்சாலை சந்தியில் கோவிங்டன் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து பொலிஸ் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
