ஐபிஎல் தொடரின் மிகவும் விவாதத்திற்குரிய Impact Player விதிமுறை குறித்து அனைத்து அணிகளின் கருத்துக்களை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரியுள்ளது.
கடந்த சீசனில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டிகள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட சவால்கள் காரணமாக, இந்த 12ஆவது வீரர் விதி கடும் விமர்சனங்களை சந்தித்தது.
ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற மூத்த வீரர்களும் இதற்கு எதிர்ப்பைப் பதிவிட்டிருந்தனர்.
இந்தநிலையில், Impact Player விதி உட்பட நடுவர் முடிவுகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் ஆட்டத்தின் கட்டுப்பாட்டு பகுதிகள் (PMOA) பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து தங்களின் ஒருங்கிணைந்த கருத்துக்களை ஒகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் அணிகளுக்கு கெடு விதித்துள்ளது.
அணிகளின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த சீசனில் இந்த விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்படுமா அல்லது இது முற்றிலுமாக ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
