நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பல சிறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பொலிஸ் குழுக்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் மோதலைக் கட்டுப்படுத்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த மோதலினால் 2 பொலிஸார் உட்பட 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இந்த மோதலினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மோதலில் காயமடைந்த 12 சிறைசாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
