Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல் 

புரட்டாதி 1, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு T 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று செவ்வாய்க்கிழமை (01) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.

2008 ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி. பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றபுலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் யூன் 17 ம் திகதி குற்றபுலனாய்வுப் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொண்டபோது, சந்தேக நபர்களான பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இருந்தவாறு இணையவழி காணொளி ஊடாக (சூம்) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்ததுடன் லண்டனில் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு காணிகளை வழங்க தீர்மானம்

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பில்

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெரகல-வெல்லவாய சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வலுக்கட்டாயமாக பூஜை செய்ய முயன்ற குழு – தாய் மீது தாக்குதல், மகன் கத்தியால் குத்திக்கொலை!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube