புத்தளம் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் சாதாரண மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் உட்பட அனைத்து தனியார் பேருந்து சேவை ஊழியர்களும் இன்று(27) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு – புத்தளம் வழியில் பயணிக்கும் நீண்டதூரம் செல்லும் பேருந்து ஊழியர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும் பொலிஸாரோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிலாபம் மற்றும் முந்தல் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 20, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பல ஊழியர்கள் இன்னமும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி கிடைக்கும் வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பைத் தொடரவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
