Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 290 குளங்கள் புனரமைப்பு

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 18 மாவட்டங்களைச் சேர்ந்த 290 சிறு நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உலக வங்கியின் நிதியுதவியுடன், 2029ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த கிராம–நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக 5,800 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரகால அமுலாக்கல் அங்கத்தின் ஊடாக ‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 290 குளங்களை புனரமைக்க 5,578.3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, பதுளையில் 97 குளங்களும், இரத்தினபுரியில் 29, மன்னாரில் 24, குருநாகலில் 19, கண்டி மற்றும் வவுனியாவில் தலா 15 குளங்களும் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 6 சிறு நீர்ப்பாசனக் குளங்கள் சுமார் 256.17 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

அதிக மழை, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலநிலை பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கவும், குளங்களின் நீர்த்தேக்க திறனை அதிகரிக்கவும் இந்தப் புனரமைப்புத் திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி – தங்கெதர, டிக்ஸன் சந்தியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிஸ்ஸங்கவுக்கு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சை!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல ரயில் விபத்தில் திருட்டு பொருட்களை வாங்கிய நபரும் கைது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம்!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube