Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

புரட்டாதி 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்;)

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (6) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம் இந்த நிலையில் நாடு அழிவு பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவினால் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் 2009 ம் ஆண்டு கிடைத்தது.

அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர் அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ஷ எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும். மக்களின் மனங்களை அறியாத அரசாங்கம் இன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.

அன்று பொருட்களின் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முந்தைய ஆட்சி காலங்களை விட பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது இதனால் மக்கள் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் நிறைந்து வழிகின்றனா.;

இன்று நாடே போர்களமாக மாறியுள்ளது டன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். எனவே இந்த தவறான செயலை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை உடனடியாக விடுதலை செய்யும்படி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

”பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம்”-ஹர்ஷன நாணயக்கார

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கறுப்பு ஜூலை – பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் நினைவுகூரல்

ஆடி 23, 2026
இலங்கைவானிலை

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36ஆவது நினைவேந்தல்

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube