I
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த அமர்வு இன்று (07) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி வரை நடைபெற அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தொடக்க உரையாற்றவுள்ளார்.
இதன்போது, இலங்கை குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் இந்த ஆண்டின் அமர்வில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய தீர்மானங்களை நிறைவேற்ற பேரவை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
