இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(12அதிகாலை ) 04:23 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வானது 5.9 முதல் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், ஆயிரம் தீவுகளுக்குச் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது.
பூமியதிர்ச்சியால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவாண்மை உறுதிப்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் பூமியதிர்ச்சியின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.
தொடர் பூமியதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
