சுகாதாரத் துறையில் 228 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.
சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கட்டம் கட்டமாக புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 600 பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
