கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த அவர், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
புதிய பதவியின் கீழ் அவர் உடனடியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
