கல்வி, பொருளாதாரம், சமூகத் தலைமைத்துவம் மற்றும் பொது வாழ்வில் பெண்கள் சமமாகப் பங்களித்து தங்களை வலுவூட்டிக்கொள்வதானது, நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும், பலமான குடும்பக் கட்டமைப்பிற்கும், நெகிழ்ச்சித்திறன் கொண்ட சமுதாயத்திற்கும் அடிப்படை அடித்தளமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜூலை 18ஆம் திகதி கொழும்பு ரமாடா (Ramada) ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் (CMLU) 90ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இந்த முக்கிய கருத்துகளை வெளியிட்டார்.
