சென்னை கோயம்பேடு அருகே தனியார் மதுபான சாலை ஒன்றில் கடந்த 31 ஆம் திகதி இரவு மது அருந்திவிட்டு நடனம் ஆடியபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
இதனால் அந்த இரு தரப்பினரும் மதுபான சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் இளம் பெண் யான்சி என்ற தரப்பும் பாலகுரு என்ற தரப்பும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பாலகுருவின் கார் கண்ணாடியை யான்சி கல் வீசி தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் யான்சியை தொடர்ந்து துரத்திச் சென்ற குழுவினர் காரை வேகமாக மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் யான்சியுடன் வந்த 17 வயது சிறுமி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்த சாலையில் அனுமதிக்கப்பட்டார்
இந்த விபத்தில் பலியான இளம் பெண் யான்சி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வசித்து வந்தவர் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த யான்சியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் படுகாயம் அடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
