கொஸ்கொட, கனேகொடை பகுதியில் காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, உயிருள்ள கைக்குண்டு மற்றும் வெடிமருந்துப் பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த குழுவும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய கொஸ்கொட, நாபே பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கொஸ்கொட காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
