டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது காவல்துறையினரால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களையும் காவல்துறையினர் கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
