Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே செம்மணி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய விசேட தூதுக்குழுவினர் செம்மணி புதைக்குழி அகழ்வுப் பணிகளை இன்று (22) நேரில் பார்வையிடவுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (21) செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு உட்பட இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரின் இந்த கண்காணிப்பு விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு விசேடமாக எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் முற்றிலும் சட்ட ரீதியானவையாவே இருக்கும். அந்த வகையில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு அமையவே செம்மணி புதைக்குழி அகழ்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும் என்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியை விட மிகப்பெரிய மனிதப் புதைகுழி வட்டுவாகால் விகாரைக்குக் கீழே உள்ளது – துரைராசா ரவிகரன்

ஆனி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹெரோயினுடன் பெண் கைது!

ஆடி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாய் மேலும் வீழ்ச்சி!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube