மரணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த பசுவொன்றுக்கு உயிர் தானம் வழங்கி பாதுகாப்பாக விடுவிக்கும் விசேட புண்ணிய நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கொள்வனவு பிரிவினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அபயதான நிகழ்வு, கடந்த 22ஆம் திகதி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன தலைமையில் நடைபெற்றது.
அபயதானம் வழங்கப்பட்ட பசுவை பாதுகாப்பான இடத்தில் பராமரிப்பதற்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.