தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரது கை மணிக்கட்டுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெறும் இந்த அறுவை சிகிச்சையின் போது உடனிருப்பதற்காக அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர்.
