பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீராங்கனைகள் அபார வெற்றி பெற்றனர்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்து ஆடிய இலங்கை மகளிர் அணி 37.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும், ஹசினி பெரேரா ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
