ஹொரண மற்றும் பிலியந்தல பகுதிகளுக்கான தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், ஹொரண – கந்தன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ரூ. 1.28 பில்லியன் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 3,500 கன மீற்றர் நீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
2027 ஒக்டோபர் மாதத்திற்குள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மதுராவல, புலத்சிங்கள மற்றும் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடையவுள்ளனர்.
இதனுடன் இணைந்து, 20 ஆண்டுகள் பழமையான கந்தன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீரேற்ற கட்டமைப்பும் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
