தனது தந்தையைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்று, பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 36 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் ஹொரண பொலிஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மது போதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபரை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, அவர் பொலிஸ் சார்ஜனையும் பாதுகாப்பு அதிகாரியையும் கையாலும் காலாலும் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த பொலிஸ் அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
