ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
246/கெந்தலியத்த பாலுவ – மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ – வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலைக்குள் நேற்று பிற்பகல் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 கைதிகள் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து கைதிகளின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டதையடுத்து, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
