மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில், 97ஆவது கிலோமீற்றர் கல் அருகில், நேற்று மூதூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 22 வயதுடைய மூதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
