நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக உணவு வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையின் நான்கு நடமாடும் சமையலறைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தேவையின்போது உடனடியாக சூடான உணவுகளை வழங்கும் வகையில், இந்த நடமாடும் சமையலறைகளை களமிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
