நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்குத் தொடர்புடைய தரப்பினருக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான்கள் வழக்குகளை பிற்போட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
