கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (05) நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நடத்துவதில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு, குறிப்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
