Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கருவுற்றிருந்த எருமை ஒன்றைச் சுட்டுக் கொன்ற நால்வருக்கு விளக்கமறியல்

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கடந்த 2 ஆம் திகதி வில்பத்து தேசியப் பூங்காவில் கன்றை வயிற்றில் சுமந்த எருமை ஒன்றைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், வில்பத்து தேசியப் பூங்காவின் திவுல்வேவா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில், மற்றைய இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் 76.5 கிலோகிராம் எருமை இறைச்சி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய விசாரணையின்படி, குற்ற நிகழ்விடத்தில் கொல்லப்பட்ட எருமையின் கருப்பையில் 4.5 கிலோகிராம் எடையுள்ள சிசு ஒன்று காணப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 16 வழக்குகள் இதுவரை நொச்சியாகம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய இரண்டு சந்தேக நபர்கள் பிணை பெறும் நோக்கில் வழக்கறிஞர்களின் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், நான்கு சந்தேக நபர்களும் இன்று (06) வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டம், பாதுகாக்கப்பட்ட பாலூட்டியான எருமையைக் கொல்வது, வைத்திருப்பது, வர்த்தகம் செய்வது, கொண்டு செல்வது மற்றும் காட்சிப்படுத்துவதைத் தடை செய்கிறது.

வனவிலங்கு அதிகாரிகள், இதுபோன்ற இறைச்சிக் கடத்தலில் ஈடுபடும் வேட்டைக்காரர்களைக் கைது செய்வதற்காகத் தொடர்ந்து சோதனைகளை நடத்துகின்றனர்.

அருகிவரும் இந்த வன விலங்குகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையும் பொறுப்புமாகும். எனவே, இதுபோன்ற வேட்டைக்காரர்கள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து 1992 என்ற உதவி எண்ணை அழைக்கவும்.

இந்த சுற்றிவளைப்பை கலாஓயா பாதுகாப்பு அலுவலகத்தின் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.கே.எச்.டி. சந்தருவன், கட்டுபத்வெவ பீட்டு வலகத்தின் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.டபிள்யூ. பண்டார, வனவிலங்கு காப்பாளர் ஆர்.எம்.சி.சி. ரத்நாயக்க மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளான ஜி.ஆர்.ஆர்.வி. குணதாச, எச்.எல்.ஜெயக்கொடி மற்றும் எச். ஹேரத் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாழங்குடாவில் வீடு தீக்கிரை!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வித்யா படுகொலை வழக்கு கைதிகள் மூவரின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது மேல் நீதிமன்றம்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube