குருவிட்ட சிறைச்சாலையில் இன்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
