வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வீதியிலிருந்து சில வினாடிகள் கூட கவனம் திசைதிரும்பினால், எதிரே வரும் வாகனங்கள், பாதசாரிகள் அல்லது தடைகளை தவிர்க்க முடியாமல் உயிராபத்தான விபத்துகள் ஏற்படக்கூடும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
சாரதிகள் தங்களது உயிருடன் பயணிகள் மற்றும் பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை கொண்டுள்ளனர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு காணொளிகளை பயணம் முடிந்த பின்னர் பார்வையிடுமாறும், “இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது” எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
