எரிபொருள் விநியோகம் மற்றும் களஞ்சிய வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், முத்துராஜவெல பகுதியில் மேலதிகமாக 7 எரிபொருள் களஞ்சியத் தொட்டிகளை நிர்மாணிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண இதனைத் தெரிவித்துள்ளதுடன், புதிய தொட்டிகளில் 4 தொட்டிகள் விமான எரிபொருளை சேமிப்பதற்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்க வரை எரிபொருளை கொண்டு செல்வதற்காக 21 கிலோமீற்றர் நீளமான புதிய குழாய் வழித்தடமொன்றை அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு துறைமுகப் பகுதியிலிருந்து கொலன்னாவை வரையான புதிய குழாய் வழித்தடத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.