குருநாகல், வெலகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகோட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 48 வயதுடைய பெண் ஒருவர் கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் நேற்று (06) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பகோட்ட பகுதியைச் சேர்ந்தவரான உயிரிழந்த பெண்ணை, குடும்பத் தகராறின் பின்னர் அவரது கணவர் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
