இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 64 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதிவான மொத்த நோயாளர்களில் 52.94 சதவீதமானோர், அதாவது 47,136 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான 18,922 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பில் 17,679 பேரும் கண்டியில் 6,298 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 3,569 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 3,686 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
