க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பாகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி வரை பரீட்சை இடம்பெறும். 2532 மத்திய நிலையங்களில் இடம்பெறும் பரீட்சையில் 372,310 பேர் தோற்றவுள்ளனர்.
அதில் 264,496 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் கடிகாரம், குறிப்புகள், டிடரநவவழவா போன்ற உபகரணங்களை மாணவர்கள் பரீட்சை செயற்பாடுகளின் போது பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
