உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் அடிப்படையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்வதற்கோ அல்லது காவலில் வைப்பதற்கோ இதுவரையில் எவ்வித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்தத் தீர்மானத்தை, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
