க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதிக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக சுமார் 1,700 ‘சிசு செரிய’ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பரீட்சைக் காலத்தில் பாடசாலை பேருந்து சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைக் காலம் முழுவதும் தொடருந்துகள் வழக்கமான கால அட்டவணையின்படி எவ்வித ரத்துகளுமின்றி இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து பாதை பராமரிப்புப் பணிகள் பரீட்சைக் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
