வல்வெட்டித்துறை – ரேவடி பகுதியில் வட்டாரசபையை ஸ்தாபிக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பும் நேற்று (09.08.2026) நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டாரசபையின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.
நிகழ்வில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
