பலாங்கொடை , பலகஹமுல பகுதியில் இன்று சனிக்கிழமை (02) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தானாக முன்னோக்கி நகர்ந்து விபத்துக்குள்ளானது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ், திடீரென முன்னோக்கிச் சென்று அங்கிருந்த ஒரு முச்சக்கரவண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், அருகில் இருந்த சிறிய பெட்டிக் கடை ஒன்றையும் உடைத்துக் கொண்டு வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
