மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்றலில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , வலி வடக்கு, முல்லைத்தீவு, கோப்பாவல மற்றும் மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில், காணிகளை இழந்த மக்களின் தொடர் உரிமைப்போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவித்தே மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“ஜனநாயகத்திற்க்கான கவனயீர்ப்பு போராட்டம்” என்ற தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
