இராஜகிரிய பிரதேசத்தில் குழுவொன்றுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும், மோதலுக்கான பின்னணி தொடர்பிலும் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
