யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நேற்று (16) நயினாதீவு அருகே விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பான தகவல் இலங்கை கற்படையினருக்கு வழங்கப்பட்டதையடுத்து, நயினாதீவு, நெடுந்தீவு மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட துரித மீட்பு நடவடிக்கையின் மூலம், படகில் பயணித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகு விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடற்பயணங்களின்போது அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும்.
