Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனைகள் கோரல்!

#சிறைச்சாலை #சிறைச்சாலைநெரிசல் #பொலிஸ் #யோசனைகள் #இலங்கை #சிறைச்சாலைதுறை #SriLanka #PrisonCrisis #Police #NewsUpdate #BreakingNews

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பில் கைது செய்வது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான பொலிஸ் திணைக்களத்தின் செயல்முறைகள் குறித்தும், அதற்காக நிலவும் சட்டரீதியான தடைகளை நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

இதன்போது போதைப்பொருள் தொடர்பான வழக்கு நடவடிக்கை தாமதங்கள், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அதன் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

போதைப்பொருள் ஒழிப்பில் நபர்களைக் கைது செய்வது மட்டுமன்றி, போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

 

அத்துடன், தொலைபேசி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறைகளைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளுக்குத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்குப் பொருத்தமான ஒழுங்குமுறை முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டத்தைப் பலப்படுத்துதல், குற்றங்களைத் தடுப்பதற்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் நிலவும் சட்டங்களைக் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்துவதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஹஜ் பயணத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் அறிவிப்பு!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 63 வீதம் வீழ்ச்சி

ஆவணி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவின் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு- எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல்!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube