நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 384 பயணிகள் மாயமாகியுள்ளதாக காவல்துறை மற்றும் நேபாள சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கில் மொத்தம் 384 பயணிகள் மாயமாகியுள்ள நிலையில் இதில் 291 வெளிநாட்டுப் பயணிகளும், 93 நேபாள நாட்டுப் பயணிகளும் அடங்குகின்றனர்.

மாயமான வெளிநாட்டவர்களில் 142 பேர் இந்தியர்கள் ஆவர் இவர்களில் 37 பேர் வேறிடவாழ் இந்தியர்கள் (Non-Resident Indians) என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களில் 111 பேரின் தேசிய மற்றும் இதர விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



