நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை என்றும், திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே இதற்குக் காரணம் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவின் தாக்கத்தால் 5.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து உருவான சேற்றாற்று வெள்ளமே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குக் காரணமாக அமைந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நேபாளத்தின் பல பகுதிகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளப்பெருக்குக்கான காரணம் தொடர்பில் முன்னர் வெளியான தகவல்களிலும் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது.
