கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களில் வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று (28) பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்குமாறும், போதியளவு தண்ணீர் அருந்துமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
