Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்நினோ காலநிலையில் அதிகம் ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெற்காசியாவில் எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை மற்றும் பொருளாதார ரீதியாக அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகளின் புதிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், உலக வானிலை அமைப்பு, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.

செப்டம்பர் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கையில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் “உயர் ஆபத்து ” என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எல் நினோ வலுவடைந்து வருவதன் காரணமாக இந்த நாடுகளில் வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காலநிலை மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நாடுகளாக இலங்கையும் பாகிஸ்தானும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் நெருக்கடிக்கு முந்தைய நிலையை விட முறையே சுமார் 44 மற்றும் 41 சதவீதம் அதிகமாக உள்ளதுடன், பணவீக்கம் சுமார் 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை, அக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தக் காலத்தில் பொதுவாக இரண்டாவது இடைப்பருவப் பருவமழை காரணமாக நாட்டில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.

இதே காலப்பகுதியிலேயே பெரும்போக நெல் அறுவடை இடம்பெறுவதால், கனமழை அல்லது வெள்ளத்துடன் அதிகரித்த எரிபொருள் மற்றும் உரச் செலவுகள் இணைந்து விவசாயிகளுக்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

எதிர்வரும் மாதங்களில் நிலைமையை நெருக்கமாகக் கண்காணிக்குமாறும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய குறிப்பிட்ட அபாயங்களைத் துல்லியமாக மதிப்பிடுவதற்காக விரிவான நாடுகள் மட்ட ஆய்வு அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தலதா மாளிகை பெரஹராவில் கடமையில் ஈடுப்பட்ட பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது

ஆவணி 23, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு அதிர்ச்சி – இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய முக்கிய 2 வீரர்கள்!

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லுனுகலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தீ பரவல்!

ஆனி 1, 2026
இலங்கைஉலகம்

இலங்கை மீன்வளத் துறைக்கு ஜப்பானின் உதவி; குளிரூட்டப்பட்ட 6 லொறிகள் கையளிப்பு!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube