Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு

#சுரங்கவிபத்து #உயிருடன்_மீட்பு #9நாட்களுக்குபின் #மீட்புப்பணி #BreakingNews #WorldNews #NewsUpdate #TamilNews #MineRescue #RescueOperation

புரட்டாதி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருக்குலைந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.

இதன்போது, போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளுக்கு அருகிலுள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் சேதமடைந்ததில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை மீட்கும் பணியில் நேபாள இராணுவத்தினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டு வந்ததுடன், இந்திய சுரங்க மீட்பு நிபுணர்களும் உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் ஆகிய இருவரை இன்று காலை நேபாள இராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரும் இராணுவ வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சுவாசிக்கத் தேவையான ஒக்சிஜன் குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.

9 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு அறிவிப்பு

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளத்தில் நீராடச்சென்ற இளைஞன் ஒருவன் உயிரிழப்பு

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் எதிர்வரும் 12 ஆம் திகதி திறந்து வைப்பு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube