வெல்லவாய , ஆனபல்லம பகுதியில் அமைந்துள்ள சபுகொட மலைக் காப்பகத்தில் திடீரெனப் பரவிய தீயினால் காப்பகத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவர் வைத்த தீயே இத்தீப்பரவலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்றும் கடும் வறட்சியும் நிலவியதன் காரணமாக, சில மணி நேரங்களிலேயே தீ காப்பகம் முழுதும் வேகமாக பரவியது. தீப்பிழம்புகள் 10 அடிக்கும் அதிகமான உயரத்திற்கு எழும்பியதால், பிரதேசவாசிகளால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்தீப்பரவலினால் காப்பகத்திலிருந்த பல பழமையான மரங்கள், புல்வெளிகள் மற்றும் அரிய வகை வனவிலங்குகள் பலியாகிப் பெரும் சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டுள்ளது.
