தெற்கு லெபனானில் உள்ள Kfar Rumman கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், லெபனான் சுகாதார அமைச்சின் ஆரம்ப தகவலின்படி, திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்து, 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று தாக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்ததுடன், மற்றொரு தாக்குதலில் வாகனம் ஒன்று தாக்கப்பட்டதில் ஒரு மருத்துவ உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேல்–ஹெஸ்பொல்லா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ளன.
