பெரேரா அண்ட் சன்ஸ் (P&S) நிறுவனத்தின் செயின்ட் பெனடிக்ட்ஸ் மாவத்தை கிளையில் காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இச்சம்பவம் “உண்மையான தவறு” எனக் குறிப்பிட்டுள்ள P&S, அனைத்து கிளைகளிலும் காலாவதி திகதிகளைச் சரிபார்க்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதாக தெரிவித்துள்ளது.
காலாவதியான பேக்கரி பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட Perera and Sons Bakers Pvt Ltd நிறுவனத்துக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஏப்ரல் 20ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின்போது, ஏப்ரல் 16ஆம் திகதி காலாவதியானதாக குறிப்பிடப்பட்ட ஸ்ட்ரோபெரி சுவையுடைய கிரீம் பன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அனைத்து கிளைகளிலும் காலாவதி திகதிகளை கூடுதல் கவனத்துடன் பரிசோதிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக P&S தெரிவித்துள்ளது.
மேலும், உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளை பரிசோதித்த பின்னரே பொருட்களை வாங்குமாறு நுகர்வோருக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
