யாழில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று (12) செவ்வாய்க்கிழமை 02 கிராம் ஹெரோயினுடன் கைது செய்து, பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரித்துள்ளனர். இந்நிலையில் இன்று (13) புதன்கிழமை காலை குறித்த இளைஞன் சுகயீனமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னரே, பொலிஸார் தன்னை கைது செய்ய வரும்போது 10 கிராம் எடையுடைய ஹெரோயினை பொலுத்தீன் பையுடன் விழுங்கிய விடயத்தை தெரிவித்துள்ளார்.
